1தேவனே, என்னைக் காப்பாற்றும்;
2ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன், நிற்க நிலையில்லை,
3நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்;
4காரணமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என்னுடைய தலைமுடியிலும் அதிகமாக இருக்கிறார்கள்;
5தேவனே, நீர் என்னுடைய புத்தியீனத்தை அறிந்திருக்கிறீர்;
6சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவரே,
7உமக்காக நிந்தையைச் சகித்தேன்;
8என்னுடைய சகோதரர்களுக்கு வேற்று மனிதனும், என்னுடைய தாயின் பிள்ளைகளுக்கு அந்நியனுமானேன்.
9உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் எனக்குள் பற்றியெரிந்தது;
10என்னுடைய ஆத்துமா வாடும்படி உபவாசித்து அழுதேன்;
11சணலாடையை என்னுடைய உடையாக்கினேன்;
12வாசலில் உட்கார்ந்திருக்கிறவர்கள் எனக்கு விரோதமாகப் பேசுகிறார்கள்;
13ஆனாலும் யெகோவாவே, உதவிக்காலத்திலே உம்மை நோக்கி விண்ணப்பம்செய்கிறேன்;
14நான் அமிழ்ந்து போகாதபடிக்குச் சேற்றிலிருந்து என்னைத் தூக்கிவிடும்;
15வெள்ளங்கள் என்மேல் புரளாமலும், ஆழம் என்னை விழுங்காமலும்,
16யெகோவாவே, என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டருளும்,
17உமது முகத்தை உமது அடியேனுக்கு மறையாதேயும்;
18நீர் என் ஆத்துமாவினிடத்தில் வந்து அதை விடுதலைசெய்யும்;
19தேவனே நீர் என்னுடைய நிந்தையையும்
20நிந்தை என்னுடைய இருதயத்தைப் பிளந்தது;
21என்னுடைய ஆகாரத்தில் கசப்பு கலந்து கொடுத்தார்கள்,
22அவர்களுடைய பந்தி அவர்களுக்குக் கண்ணியும்,
23அவர்களுடைய கண்கள் காணாதபடி இருளாகட்டும்;
24உம்முடைய கடுங்கோபத்தை அவர்கள்மேல் ஊற்றும்;
25அவர்கள் குடியிருப்பு பாழாகட்டும்;
26தேவனே நீர் அடித்தவனை அவர்கள் துன்பப்படுத்தி,
27அக்கிரமத்தின்மேல் அக்கிரமத்தை அவர்கள்மேல் சுமத்தும், அவர்கள் உமது நீதிக்கு வந்தெட்டாதிருப்பார்களாக.
28ஜீவபுத்தகத்திலிருந்து அவர்கள் பெயர் கிறுக்கப்பட்டுப்போவதாக;
29நானோ சிறுமையும் துயரமுமுள்ளவன்;
30தேவனுடைய பெயரைப் பாட்டினால் துதித்து,
31கொம்பும் விரிகுளம்புமுள்ள காளை எருதைவிட,
32சாந்தகுணமுள்ளவர்கள் இதைக் கண்டு சந்தோஷப்படுவார்கள்;
33யெகோவா எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்கிறார்,
34வானமும் பூமியும் கடல்களும் அவைகளில் வாழ்கிற அனைத்தும் அவரைத் துதிக்கட்டும்.
35தேவன் சீயோனைக் காப்பாற்றி, யூதாவின் பட்டணங்களைக் கட்டுவார்;
36அவருடைய ஊழியக்காரரின் சந்ததியார் அதை உரிமையாக்கிக் கொள்வார்கள்;