1என் மகனே, நீ என்னுடைய வார்த்தைகளைக்காத்து,
2என்னுடைய கட்டளைகளையும் என்னுடைய போதகத்தையும் உன்னுடைய கண்மணியைப்போல் காத்துக்கொள்,
3அவைகளை உன்னுடைய விரல்களில் கட்டி,
4ஆசைவார்த்தைகளைப் பேசும் அந்நியப் பெண்ணாகிய ஒழுங்கீனமானவளுக்கு உன்னை விலக்கிக் காப்பதற்காக,
5ஞானத்தை நோக்கி, நீ என்னுடைய சகோதரி என்றும்,
6நான் என்னுடைய வீட்டின் ஜன்னல் அருகே நின்று,
7பேதையர்களாகிய வாலிபர்களுக்குள்ளே
8அவன் மாலைமயங்கும் சூரியன் மறையும் நேரத்திலும்,
9அவள் இருக்கும் தெருவிற்கு அடுத்த தெருவில் சென்று,
10அப்பொழுது இதோ, விபசாரியின் ஆடை ஆபரணம் தரித்த
11அவள் வாயாடியும் அடங்காதவளுமானவள்;
12சிலவேளை வெளியிலே இருப்பாள், சிலவேளை வீதியில் இருப்பாள்,
13அவள் அவனைப் பிடித்து முத்தமிட்டு,
14சமாதான பலிகள் என்மேல் சுமந்திருந்தது,
15ஆதலால், நான் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு,
16என்னுடைய மெத்தையை இரத்தினக் கம்பளங்களாலும்,
17என்னுடைய படுக்கையை வெள்ளைப்போளத்தாலும்
18வா, விடியற்காலைவரைக்கும் சந்தோஷமாக இருப்போம்,
19கணவன் வீட்டிலே இல்லை, தூரப்பயணம் போனான்.
20பணப்பையைத் தன்னுடைய கையிலே கொண்டுபோனான்,
21தன்னுடைய மிகுதியான இனிய சொற்களால் அவனை வசப்படுத்தி,
22உடனே அவன் அவள் பின்னே சென்றான்;
23ஒரு குருவி தன்னுடைய உயிரை வாங்கும் கண்ணியை அறியாமல்
24ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்;
25உன்னுடைய இருதயம் அவளுடைய வழியிலே சாயவேண்டாம்;
26அவள் அநேகரைக் காயப்படுத்தி, விழச்செய்தாள்;
27அவளுடைய வீடு பாதாளத்திற்குப்போகும் வழி;