1என் மகனே, நீ உன்னுடைய நண்பனுக்காகப் பொறுப்பேற்று,
2நீ உன்னுடைய வாய்மொழிகளால் சிக்கிக்கொண்டாய்,
3இப்பொழுது என் மகனே, உன்னுடைய நண்பனுடைய கையில் நீ அகப்பட்டுக்கொண்டதால்,
4உன்னுடைய கண்ணுக்கு தூக்கத்தையும்,
5வெளிமான் வேட்டைக்காரனுடைய கைக்கும், குருவி வேடனுடைய கைக்கும் தப்புவதுபோல,
6சோம்பேறியே, நீ எறும்பினிடம் போய்,
7அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாமல் இருந்தும்,
8கோடைக்காலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து,
9சோம்பேறியே, நீ எவ்வளவு நேரம் படுத்திருப்பாய்?
10இன்னும் கொஞ்சம் தூங்கட்டும், இன்னும் கொஞ்சம் உறங்கட்டும்,
11உன்னுடைய தரித்திரம் வழிப்போக்கனைப் போலவும்,
12வீணான மனிதனாகிய ஒரு துன்மார்க்கன் ஏளனம் பேசித்திரிகிறான்.
13அவன் தன்னுடைய கண்களால் சைகைகாட்டி,
14அவனுடைய இருதயத்திலே பொய்யுண்டு;
15ஆகையால் திடீரென அவனுக்கு ஆபத்து வரும்;
16ஆறு காரியங்களைக் யெகோவா வெறுக்கிறார்,
17அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு,
18மிகக்கொடிய சிந்தனைகளைத் தூண்டுகின்ற இருதயம்,
19பொய்யானதைப் பேசும் பொய்ச்சாட்சி,
20என் மகனே, உன்னுடைய தகப்பன் கற்பனையைக் காத்துக்கொள்;
21அவைகளை எப்பொழுதும் உன்னுடைய இருதயத்திலே அணிந்து, அவைகளை உன்னுடைய கழுத்திலே கட்டிக்கொள்.
22நீ நடக்கும்போது அது உனக்கு வழிகாட்டும்;
23கட்டளையே விளக்கு,
24அது உன்னைத் துன்மார்க்கப் பெண்ணுக்கும்,
25உன்னுடைய இருதயத்திலே அவளுடைய அழகை ரசிக்காதே;
26விபசாரியினால் ஒரு அப்பத்துண்டையும் இழக்கவேண்டியதாகும்;
27தன்னுடைய உடை வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளமுடியுமா?
28தன்னுடைய கால் சுடாமல் எவனாவது தழலின்மேல் நடக்கமுடியுமா?
29பிறனுடைய மனைவியிடம் தவறான உறவுகொள்பவனும்,
30திருடன் தன்னுடைய பசியை ஆற்றத் திருடினால் மக்கள் அவனை இகழமாட்டார்கள்;
31அவன் கண்டுபிடிக்கப்பட்டால் ஏழு மடங்கு கொடுத்துத் தீர்க்கவேண்டும்;
32பெண்ணுடனே விபசாரம்செய்கிறவன் மதிகெட்டவன்;
33வாதையையும் வெட்கத்தையும் அடைவான்;
34பெண்ணைப்பற்றிய எரிச்சல் ஆணுக்கு கடுங்கோபத்தை உண்டாக்கும்;
35அவன் எந்த நஷ்டத்தையும் பார்க்கமாட்டான்;