1ஞானம் தனக்கென ஒரு வீட்டைக் கட்டி,
2ஞானம் இறைச்சியைத் தயாரித்து திராட்சை இரசத்தையும் கலந்திருக்கிறது;
3தன் பணிப்பெண்களை வெளியே அனுப்பிவிட்டு,
4“அறிவற்றவர்களே நீங்கள் எல்லோரும் இங்கே வாருங்கள்!”
5“வாருங்கள், எனது உணவைச் சாப்பிட்டு
6நீங்கள் உங்கள் மூடவழிகளை விட்டுவிடுங்கள், அப்பொழுது வாழ்வடைவீர்கள்;
7ஏளனம் செய்பவர்களைத் திருத்துகிறவர்கள் தங்களுக்கு அவமதிப்பைத் தேடிக்கொள்கிறார்கள்;
8ஏளனம் செய்பவர்களை கடிந்துகொள்ளாதே, அவர்கள் உன்னை வெறுப்பார்கள்;
9ஞானமுள்ளவர்களுக்கு அறிவுரை கூறு, அவர்கள் இன்னும் ஞானத்தில் வளருவார்கள்;
10யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்,
11ஏனெனில் ஞானத்தினாலே உன் வாழ்நாட்கள் அதிகரிக்கும்,
12நீ ஞானியாய் இருந்தால், உன் ஞானம் உனக்கு வெகுமதியைக் கொடுக்கும்;
13மூடத்தனம் ஒரு முட்டாள் பெண்போல் இருக்கிறது;
14அவள் தனது வீட்டின் வாசற்படியில் உட்கார்ந்திருக்கிறாள்,
15அவள் தன்னைக் கடந்து தங்கள் வழியில்
16“அறிவற்றவர்களே, நீங்கள் எல்லோரும் இங்கே வாருங்கள்!”
17“திருட்டுத்தண்ணீர் இனிமையானது;
18ஆனால் அங்கு செத்தவர்கள் இருக்கிறார்கள் என்றும்,