1சாலொமோனின் நீதிமொழிகள்:
2நீதியற்ற வழியில் சம்பாதித்த செல்வம் பயனற்றது,
3யெகோவா நீதிமான்களைப் பசியாயிருக்க விடுவதில்லை,
4சோம்பேறிகளின் கைகள் வறுமையை உண்டாக்கும்,
5கோடைகாலத்தில் பயிர்களை சேர்க்கிறவன் விவேகமுள்ள மகன்;
6நீதிமான்களின் தலையை ஆசீர்வாதங்கள் முடிசூட்டும்;
7நீதிமான்களைப் பற்றிய நினைவு ஆசீர்வாதமாயிருக்கும்;
8இருதயத்தில் ஞானமுள்ளவர்கள் கட்டளைகளை ஏற்றுக்கொள்கிறார்கள்;
9நேர்மையாய் நடக்கிறவர்கள் பாதுகாப்பாக நடக்கிறார்கள்,
10தீயநோக்கத்தோடு கண் சிமிட்டுகிறவன் துயரத்தை உண்டாக்குகிறான்;
11நீதிமான்களின் வாய் வாழ்வின் நீரூற்று,
12பகைமை பிரிவினையைத் தூண்டிவிடுகிறது;
13பகுத்தறிகிறவர்களின் உதடுகளில் ஞானம் காணப்படுகிறது,
14ஞானமுள்ளவர்கள் அறிவைச் சேர்த்துவைக்கிறார்கள்;
15பணக்காரர்களின் செல்வம் அவர்களுடைய அரணான பட்டணம்;
16நீதிமான்களின் கூலி, அவர்களுக்கு வாழ்வு,
17நற்கட்டுப்பாட்டை ஏற்றுக்கொள்ளுகிறவன் வாழ்வின் வழியைக் காட்டுகிறான்;
18பகையை மறைப்பவன் பொய்யன்;
19அதிக வார்த்தைகள் பேசும் இடத்தில் பாவமில்லாமற்போகாது;
20நீதிமான்களின் நாவு தரமான வெள்ளி,
21நீதிமான்களின் வார்த்தைகள் அநேகருக்கு ஊட்டம்;
22யெகோவாவின் ஆசீர்வாதம் செல்வத்தைக் கொண்டுவருகிறது;
23தீங்கு செய்வது மூடர்களுக்கு வேடிக்கையானது;
24கொடியவர்கள் எதற்குப் பயப்படுகிறார்களோ, அது அவர்களுக்கு நேரிடும்;
25சுழல் காற்று அடித்துச் செல்லும்போது, கொடியவர்கள் இல்லாமற்போவார்கள்;
26பற்களுக்குப் புளிப்பும், கண்களுக்கு புகையும் எப்படியோ,
27யெகோவாவுக்குப் பயந்து நடப்பது வாழ்நாட்களை நீடிக்கும்,
28நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாயிருக்கும்,
29யெகோவாவின் வழி நீதிமான்களுக்கு புகலிடம்,
30நீதிமான்கள் ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை;
31நீதிமான்களின் பேச்சு ஞானத்தைக் கொடுக்கும்,
32நீதிமான்களின் உதடுகள் தகுதியானவற்றைப் பேசும்;