1பிள்ளைகளே, தகப்பனின் அறிவுரைகளைக் கேளுங்கள்;
2நான் உங்களுக்கு நல்ல ஆலோசனையைத் தருகிறேன்,
3நான் எனது தகப்பனுக்குச் செல்ல மகனாய்,
4அப்பொழுது என் தகப்பன் எனக்குப் போதித்துச் சொன்னதாவது:
5ஞானத்தையும் புரிந்துகொள்ளுதலையும் பெற்றுக்கொள்;
6நீ ஞானத்தை விட்டுவிடாதே, அது உன்னைப் பாதுகாக்கும்;
7ஞானத்தைப் பெற்றுக்கொள்வதே ஞானத்தின் ஆரம்பம்;
8நீ அதை மதித்து நட, அது உன்னை மேன்மைப்படுத்தும்;
9அது உன் தலையில் அழகான மலர் முடியைச் சூட்டும்,
10என் மகனே, கேள், நான் சொல்வதை ஏற்றுக்கொள்;
11நான் ஞானத்தின் வழியை உனக்குக் காட்டி,
12நீ நடக்கும்போது, உன் கால்கள் தடுமாறாது;
13அறிவுரைகளைப் பற்றிக்கொள், அவற்றை விட்டுவிடாதே;
14கொடியவர்களின் பாதையில் அடியெடுத்து வைக்காதே;
15அதைத் தவிர்த்துவிடு, அதில் பயணம் செய்யாதே;
16ஏனெனில் தீமைசெய்யும்வரை அவர்கள் உறங்கமாட்டார்கள்;
17அவர்கள் கொடுமையின் உணவைச் சாப்பிட்டு,
18நீதிமான்களின் பாதை நடுப்பகல் வரைக்கும்
19ஆனால் கொடியவர்களின் வழியோ காரிருளைப் போன்றது;
20என் மகனே, நான் சொல்வதைக் கவனி;
21அவற்றை உன் பார்வையிலிருந்து விலகவிடாதே,
22அவற்றைக் கண்டுபிடிப்பவர்களுக்கு அவை வாழ்வாக இருக்கும்;
23எல்லாவற்றிற்கும் மேலாக, உன் இருதயத்தைக் காத்துக்கொள்,
24வஞ்சகத்தை உன் வாயிலிருந்து அகற்று,
25உன் கண்கள் நேராய் பார்க்கட்டும்;
26உன் பாதங்களுக்கு ஒழுங்கான பாதைகளை அமைத்துக்கொள்;
27நீ இடது பக்கமோ, வலதுபக்கமோ விலகாதே;