1ஞானமுள்ள மகன் தன் தகப்பனின் அறிவுரையை ஏற்றுக்கொள்கிறான்;
2மனிதர் தன் வாயின் வார்த்தையினால் நன்மைகளை அனுபவிக்கிறார்கள்,
3தங்கள் நாவைக் காத்துக்கொள்பவர்கள் வாழ்வைக் காத்துக்கொள்கிறார்கள்,
4சோம்பேறிகள் ஆசைப்பட்டும் ஒன்றும் பெறாமலிருக்கிறார்கள்;
5நீதிமான்கள் பொய்யானவற்றை வெறுக்கிறார்கள்,
6உத்தமமானவர்களை நீதி காத்துக்கொள்ளும்;
7சிலர் ஒன்றுமில்லாமல் பணக்காரர்களைப் போல பாசாங்கு செய்வார்கள்;
8பயமுறுத்தப்படும்போது பணக்காரர் தம் செல்வத்தைத் தந்து அவருடைய வாழ்வை மீட்கலாம்,
9நீதிமான்களின் வெளிச்சம் ஒளிவிட்டுப் பிரகாசிக்கிறது,
10அகந்தை வாக்குவாதங்களை பிறப்பிக்கிறது,
11தவறான வழியில் சம்பாதித்த பணம் அழிந்துபோகும்,
12எதிர்பார்ப்பு நிறைவேறத் தாமதிக்கும்போது, அது இருதயத்தைச் சோர்வுறப்பண்ணும்;
13அறிவுரையை ஏளனம் செய்பவர்கள் அதற்குரிய தண்டனையைப் பெறுவார்கள்;
14ஞானமுள்ளவர்களின் போதனை வாழ்வின் நீரூற்று;
15நல்லறிவுள்ளவர்கள் தயவைப் பெறுவார்கள்,
16விவேகிகள் அறிவுடன் நடந்துகொள்கிறார்கள்;
17கொடிய தூதுவன் தொல்லையில் விழுகிறான்,
18அறிவுரையை அலட்சியம் செய்பவர்கள் வறுமையையும் வெட்கத்தையும் அடைகிறார்கள்;
19வாஞ்சை நிறைவேறுவது உள்ளத்திற்கு இனிது,
20ஞானிகளோடு வாழ்கிறவர்கள் ஞானிகளாவார்கள்;
21பேரழிவு பாவிகளைப் பின்தொடர்கிறது,
22ஒரு நல்ல மனிதர் தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு பரம்பரை சொத்துக்களை விட்டுச்செல்கிறார்;
23ஒரு ஏழையின் தரிசு நிலம் உணவை விளைவிக்கலாம்,
24பிரம்பைக் கையாளாதவர்கள் தன் பிள்ளைகளை வெறுக்கிறார்கள்;
25நீதிமான்கள் தங்கள் உள்ளம் திருப்தியாகுமட்டும் சாப்பிடுவார்கள்;