1அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக சொன்னது:
2“நீ எப்பொழுது இந்தப் பேச்சுக்களை நிறுத்துவாய்?
3உன் பார்வையில் நாங்கள் மிருகங்களைப்போல கருதப்பட்டு
4உன் கோபத்தில் உன்னையே காயப்படுத்துகிறவனே,
5“கொடியவனின் விளக்கு அணைக்கப்படுகிறது;
6அவனுடைய கூடார வெளிச்சம் இருளாகிறது;
7அவனுடைய நடையின் கம்பீரம் பலவீனமடைகிறது;
8அவன் தன் கால்களினால் வலையில் பிடிபட்டு,
9பொறி அவன் குதிகாலைப் பிடிக்கிறது;
10சுருக்கு அவனுக்காகத் தரையிலும்,
11எப்பக்கத்திலும் பயங்கரங்கள் அவனைத் திடுக்கிடப்பண்ணி,
12பேரழிவு அவனுக்காக காத்திருக்கிறது;
13வியாதி அவன் தோலைத் தின்கிறது;
14அவன் தன் கூடாரத்தின் பாதுகாப்பிலிருந்து பிடுங்கப்பட்டு,
15அவனுடைய கூடாரத்தில் நெருப்பு குடியிருக்கும்;
16கீழே அவனுடைய வேர்கள் காய்ந்து போகின்றன;
17அவனைப் பற்றிய நினைவு பூமியிலிருந்து அற்றுப்போகிறது;
18அவன் வெளிச்சத்திலிருந்து இருளுக்குள் தள்ளப்படுகிறான்;
19அவனுடைய மக்கள் மத்தியில் அவனுக்கு சந்ததிகளே இல்லை,
20அவன் முடிவைக்கண்டு மேற்கிலுள்ளோர் நடுங்கினர்;
21தீயவனின் குடியிருப்பு இத்தகையதே;