1வானங்களே, செவிகொடுங்கள், நான் பேசுவேன்.
2என் போதனை மழைபோலப் பெய்யட்டும்.
3நான் யெகோவாவின் பெயரை அறிவிப்பேன்.
4அவரே கற்பாறை, அவருடைய செயல்கள் முழு நிறைவானவை.
5இஸ்ரயேலரோ அவர்முன் இழிவானவற்றைச் செய்தார்கள்.
6மூடரும், ஞானம் அற்றவர்களுமான மக்களே!
7பழைய நாட்களை நினைவுகூருங்கள்;
8மகா உன்னதமானவர் நாடுகளுக்கு உரிமைச்சொத்தைப் பங்கிட்டபோது,
9யெகோவாவின் மக்களே அவரின் பங்கு,
10அவர் அவர்களைப் பாலைவன நாட்டிலே கண்டெடுத்தார்;
11கழுகு தன் கூட்டைக் கலைத்து,
12யெகோவா ஒருவரே அவர்களை வழிநடத்தினர்,
13அவர் அவர்களை நிலத்தின் மேடுகளில் ஏறி நடக்கச் செய்தார்.
14பசுக்களின் தயிர், ஆடுகளின் பால்,
15யெஷூரன்32:15 யெஷூரன் என்றால் நேர்மையானவன் என்று பொருள், இஸ்ரயேலின் மறுபெயர். ஏசா. 44:2. கொழுப்பு மிகுந்து அடங்காதவன் ஆனான்.
16இஸ்ரயேலர் அந்நிய தெய்வங்களைப் பின்பற்றி யெகோவாவுக்கு எரிச்சல்மூட்டி,
17அவர்கள் பேய்களுக்குப் பலி செலுத்தினார்கள். அவை இறைவன் அல்ல.
18உங்களை உருவாக்கிய கற்பாறையைக் கைவிட்டு விட்டீர்கள்.
19யெகோவா இதைக்கண்டு தனது மகன்களும்,
20“அவர்களுக்கு என் முகத்தை மறைப்பேன்;
21தெய்வம் அல்லாதவற்றால் எனக்கு எரிச்சல்மூட்டி,
22எனது கோபத்தினால் நெருப்பு மூட்டப்பட்டிருக்கிறது,
23“நான் அவர்கள்மேல் பேரழிவுகளைக் குவிப்பேன்;
24நான் அவர்களுக்கு எதிராக வாட்டும் பஞ்சத்தை அனுப்புவேன்;
25வீதிகளிலே, வாளானது அவர்களைப் பிள்ளைகள் அற்றவர்களாக்கும்;
26நான் அவர்களைச் சிதறடிப்பேன்;
27‘எங்கள் கைகளே வெற்றிகொண்டன,
28இஸ்ரயேல் ஒரு உணர்வற்ற நாடு,
29அவர்கள் ஞானமுள்ளவர்களாயிருந்து, இதை விளங்கிக்கொண்டு,
30அவர்களில் ஆயிரம்பேரை ஒருவன் துரத்துவதெப்படி?
31நமது பகைவர் ஒத்துக்கொள்வதுபோல்,
32பகைவர்களின் திராட்சைக்கொடி சோதோமின் திராட்சைக் கொடியிலிருந்து உண்டானது.
33அவர்களின் திராட்சை இரசம் பாம்புகளின் விஷமாயிருக்கிறது.
34“யெகோவா சொல்கிறதாவது: இதை நான் சேர்த்துவைத்து,
35பழிவாங்குதல் எனக்குரியது; நானே பதில் செய்வேன்.
36யெகோவா தமது மக்களை நியாயந்தீர்ப்பார்.
37ஆனாலும் அவர், “இப்பொழுது அவர்களுடைய தெய்வங்கள் எங்கே?
38அவர்களுடைய பலிகளின் கொழுபைத்தின்ற தெய்வங்கள் எங்கே?
39“இப்பொழுது பாருங்கள், நான், நானே அவர்!
40நான் என் கைகளை வானத்திற்கு உயர்த்தி அறிவிக்கிறதாவது:
41பளபளக்கும் என் வாளை நான் கூராக்கி,
42செத்தும், சிறைப்பட்டும் போனவர்களின் இரத்தத்தினால்
43நாடுகளே, அவருடைய மக்களோடு சேர்ந்து களிகூருங்கள்.
44பின்பு மோசே நூனின் மகனான யோசுவாவுடன் வந்து, இந்தப் பாட்டின் சொற்களையெல்லாம் மக்கள் கேட்கும்படி பேசினான்.
45மோசே இந்த வார்த்தைகளையெல்லாம் இஸ்ரயேலர் எல்லாருக்கும் சொல்லி முடித்தபின்பு,
46அவன் அவர்களிடம், “நான் இன்று பயபக்தியுடன் உங்களுக்கு அறிவித்த இந்த வார்த்தைகளை உங்கள் இருதயத்தில் பதித்துக்கொள்ளுங்கள். இந்த சட்டத்தின் வார்த்தைகளுக்கெல்லாம் கவனமாய் கீழ்ப்படியும்படி உங்கள் பிள்ளைகளுக்கும் கட்டளையிடுங்கள்.
47அவை உங்களுக்குக் கொடுக்கப்படும் வீண் வார்த்தைகள் அல்ல. அவையே உங்களுக்கு உயிர்கொடுக்கும். நீங்கள் யோர்தானைக் கடந்து உரிமையாக்கிக்கொள்ளும் நாட்டில் இந்த வார்த்தைகளினால் நீடித்து வாழ்வீர்கள்” என்றான்.
48அதே நாளில் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது,
49“நீ எரிகோவுக்கு எதிரேயுள்ள மோவாப் நாட்டிலே இருக்கும் அபாரீம் மலைத்தொடரில் ஏறி நேபோ மலைக்குப்போ. அங்கிருந்து இஸ்ரயேலருக்கு நான் உரிமைச்சொத்தாகக் கொடுக்கும் கானான் நாட்டைப் பார்.
50நீ ஏறும் அந்த மலையிலேயே இறப்பாய். உன் சகோதரன் ஆரோன் ஓர் என்னும் மலையில் இறந்து தன் முன்னோருடன் சேர்த்துக்கொள்ளப்பட்டது போல், நீயும் உன் முன்னோருடன் சேர்த்துக்கொள்ளப்படுவாய்.
51சீன் பாலைவனத்தில் மேரிபா காதேஷ் தண்ணீர் அருகே இஸ்ரயேலர் முன்னிலையில் நீங்கள் இருவரும் எனக்கு நம்பிக்கையற்றவர்களாய் இருந்தீர்கள். இஸ்ரயேலர் மத்தியிலே நீ எனது பரிசுத்தத்தையும் பேணிக்காத்துக்கொள்ளவில்லை. இதனாலேயே உனக்கு இப்படி நடக்கும்.
52ஆகையால் நீ தூரத்திலிருந்து மட்டுமே அந்த நாட்டைப் பார்ப்பாய். இஸ்ரயேல் மக்களுக்கு நான் கொடுக்கும் நாட்டிற்குள் நீ போகமாட்டாய்” என்றார்.