1யோபு மறுமொழியாக:
2“பெலனில்லாதவனுக்கு நீ எப்படி உதவிசெய்தாய்?
3நீ ஞானமில்லாதவனுக்கு எப்படி உறுதுணையாயிருந்து,
4யாருக்கு அறிவைப் போதித்தாய்?
5தண்ணீரின் கீழ் இறந்தவர்களுக்கும்,
6அவருக்கு முன்பாகப் பாதாளம் தெரியும்விதத்தில் திறந்திருக்கிறது;
7அவர் வடக்குமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து,
8அவர் தண்ணீர்களைத் தம்முடைய கார்மேகங்களில் கட்டிவைக்கிறார்;
9அவர் தமது சிங்காசனம் நிற்கும் ஆகாயத்தை பலப்படுத்தி,
10அவர் தண்ணீர்கள்மேல் சுழற்சி வட்டம் அமைத்தார்;
11அவருடைய கண்டிப்பினால் வானத்தின் தூண்கள் அதிர்ந்து தத்தளிக்கும்.
12அவர் தமது வல்லமையினால் சமுத்திரக் கொந்தளிப்பை அமரச்செய்து,
13தமது ஆவியினால் வானத்தை அலங்கரித்தார்;
14இதோ, இவைகள் அவருடைய படைப்பில் கடைசியானவைகள்,