1யோபு தன் பார்வைக்கு நீதிமானாயிருந்ததினால், அந்த மூன்று நண்பர்களும் யோபுவுக்கு பதில் சொல்வதை நிறுத்திக்கொண்டார்கள்.
2ஆனால் ராமின் குடும்பத்தைச் சேர்ந்த பூசியனான பரகெயேலின் மகன் எலிகூவுக்குக் கோபமூண்டது; ஏனெனில், யோபு இறைவன் நேர்மையானவர் என்று சொல்வதைவிட, தன்னைத்தானே நேர்மையானவன் என்று சொன்னான்.
3அத்துடன் யோபுவுக்கு அவனுடைய மூன்று நண்பர்கள் மேலும் கோபம் மூண்டது; ஏனெனில், அவர்கள் யோபுவின் தவறை நிரூபிக்க தகுந்த வழியில்லாமல், அவனைக் கண்டனம் செய்தார்கள்.
4எலிகூ யோபுவுடன் பேசுவதற்கு இதுவரையும் காத்திருந்தான்; ஏனெனில் அவர்கள் எல்லோரும் எலிகூவைவிட வயதில் மூத்தவர்கள்.
5ஆனாலும் அந்த மூன்று மனிதரும் மேலும் எதையும் சொல்ல முடியாததைக் கண்ட எலிகூவுக்குக் கோபமூண்டது.
6எனவே பூசியனான பரகெயேலின் மகன் எலிகூ பேசத் தொடங்கினான்:
7‘முதியோர் பேசட்டும்,
8மனிதரில் இருக்கும் ஆவியாகிய
9முதியோர் மட்டுமே ஞானிகளல்ல;
10“ஆகவே, நான் சொல்கிறேன்: எனக்குச் செவிகொடுங்கள்;
11நீங்கள் பேசிமுடியுமட்டும் நான் காத்திருந்து,
12நான் உங்கள் சொல்லைக் கவனமாய்க் கேட்டேன்.
13‘ஞானத்தைக் கண்டுகொண்டோம்; அவனுடைய பிழையை மனிதன் அல்ல,
14யோபு என்னோடு வாதாடவில்லை,
15“அவர்கள் மனங்கலங்கி மேலும் எதுவும் சொல்ல முடியாதிருக்கிறார்கள்;
16இப்பொழுது அவர்கள் மவுனமாகி ஒரு பதிலும் அளிக்க முடியாதிருக்கையில்,
17இப்பொழுது நானும் பேசியே தீருவேன்;
18பேசுவதற்கு என்னிடம் அதிக வார்த்தைகள் உண்டு,
19என் உள்ளம், தோல் குடுவையின் திராட்சரசத்தைப்போலவும்,
20நான் பேசி ஆறுதலடைய வேண்டும்;
21நான் யாருக்கும் பட்சபாதம் காட்டவோ,
22நான் முகஸ்துதியில் திறமையுள்ளவனாய் இருந்தால்,