1பின்னும் எலிகூ:
2“நான் பேசிமுடியும்வரை சற்றேபொறும்;
3நான் தூரத்திலிருந்து என் ஞானத்தைக் கொண்டுவந்து,
4மெய்யாகவே என் வார்த்தைகள் பொய்யில்லாமல் இருக்கும்;
5இதோ, தேவன் மகத்துவமுள்ளவர், அவர் ஒருவரையும் தள்ளிவிடமாட்டார்;
6அவர் துன்மார்க்கரைப் பிழைக்க விடாதிருக்கிறார்;
7அவர் தம்முடைய கண்களை நீதிமான்களைவிட்டு விலக்காமல்,
8அவர்கள் விலங்குகள் போடப்பட்டு,
9அவர், அவர்களுடைய செயல்களையும்,
10அக்கிரமத்தைவிட்டுத் திரும்பும்படி அவர்கள் காது கேட்க கடிந்துகொள்ளுகிறார்.
11அவர்கள் அடங்கி அவரை ஆராதித்தால்,
12அடங்கவில்லை என்றால் பட்டயத்திற்கு இரையாகி,
13மாயமுள்ள இருதயத்தார்36:13 இருதயத்தில் விசுவசிக்காதவர்கள் கோபத்தைக் குவித்துக்கொள்ளுகிறார்கள்;
14அவர்கள் இளவயதிலே இறந்துபோவார்கள்;
15சிறுமைப்பட்டவர்களை அவர் சிறுமைக்கு விலக்கி,
16அப்படியே அவர் உம்மையும் நெருக்கத்திலிருந்து விலக்கி,
17ஆகாதவன்மேல் வரும் நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப் பார்ப்பீர்;
18கடுங்கோபம் உண்டாயிருக்கிறதினால்
19உம்முடைய செல்வத்தை அவர் மதிப்பாரோ?
20மக்கள் தங்கள் இடத்தைவிட்டு அழிந்துபோகச்செய்கிற இரவை விரும்பாதிரும்.
21பாவத்தைத் திரும்பவும் செய்யாமல் எச்சரிக்கையாயிரும்;
22இதோ, தேவன் தம்முடைய வல்லமையில் உயர்ந்திருக்கிறார்;
23அவருடைய வழியின் நியாயத்தை விசாரிக்கத்தகுந்தவன் யார்?
24மனிதர் நோக்கிப்பார்க்கிற அவருடைய செயல்களை நீர் மகிமைப்படுத்த நினையும்.
25எல்லா மனிதரும் அதைக் காண்கிறார்களே;
26இதோ, தேவன் மகத்துவமுள்ளவர்;
27அவர் நீர்த்துளிகளை அணுவைப்போல ஏறவைக்கிறார்;
28அதை மேகங்கள் பெய்து, மனிதர்கள் மேல் அதிகமாகப் பொழிகிறது.
29மேகங்கள் பரவுகிறதையும், அவருடைய கூடாரத்திலிருந்து எழும்பும் குமுறல்களையும் அறியமுடியுமோ?
30இதோ, அதின்மேல் தம்முடைய மின்னலின் ஒளியை பரப்புகிறார்;
31அவைகளால் மக்களை தண்டிக்கிறவரும்,
32அவர் மின்னலின் ஒளியைத் தமது கைக்குள்ளே மூடி,
33அதினால், அவர் செய்ய நினைக்கிறதையும்,