1“பெண்ணினால் பெற்றெடுக்கப்பட்ட மனிதன் சில நாட்களே வாழ்கிறான்,
2அவன் ஒரு பூவைப்போல் பூத்து வாடிப்போகிறான்;
3அப்படிப்பட்டவனை நீர் கூர்ந்து கவனிப்பீரோ?
4அசுத்தத்தில் இருந்து சுத்தத்தை உருவாக்க யாரால் முடியும்?
5மனிதனுடைய நாட்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன;
6ஒரு கூலியாள் தன் அன்றாட வேலை முடிந்தது என்று நிம்மதியாய் இருக்கிறானே.
7“மரத்திற்குக்கூட ஒரு எதிர்பார்ப்பு உண்டு:
8அதின் வேர் நிலத்தினடியில் பழையதாகி,
9தண்ணீர் பட்டவுடனே அது துளிர்விட்டு
10மனிதனோ இறந்தபின்,
11கடல் தண்ணீர் வற்றி,
12மனிதன் படுத்துக்கிடக்கிறான்,
13“நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து,
14ஒரு மனிதன் இறந்துபோனால் திரும்பவும் அவன் வாழ்வானோ?
15அப்பொழுது நீர் கூப்பிடுவீர், நான் பதில் கொடுப்பேன்,
16நிச்சயமாக நீர் என் காலடிகளைக் கணக்கிடுவீர்;
17எனது குற்றங்கள் பையில் இடப்பட்டு முத்திரையிடப்படும்;
18“ஆனால் மலை இடிந்து விழுந்து கரைவதுபோலவும்,
19தண்ணீர் கற்களை அரிப்பதுபோலவும்,
20நீர் அவனை ஒரேயடியாக மேற்கொள்கிறீர், அவன் இல்லாமல் போகிறான்;
21அவனுடைய மகன்கள் மேன்மையடைந்தாலும், அவன் அதை அறியான்;
22ஆனால் தன் சொந்த உடலின் நோவை மட்டுமே அறிவான்,